புனித மக்காவில் உள்ள ஜாம்ஜாம் கிணறு 5000 ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது

புனித மெக்காவில் உள்ள ஜம்ஜம் கிணறு... 5000 ஆண்டுகள் கடந்தும் இன்னும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது...



மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும். இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும், மகன் இஸ்மாயீலையும் மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த் தினார்கள்.

குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாகவும் இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாகவும் இருக்கிறது.

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும். இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.

இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழு முகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக் கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல்  தமது சொந்த ஊருக்கும் அந்த தண்ணீரை எடுத்துச் செல்கிறார்கள். பாலைவனத்தில் அமந்துள்ள குறைந்த ஆழம் உள்ள இந்தக் கிணற்றுக்கு அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ கிடையாது.

அந்தக் கிணற்றில் இருந்து லட்சோபலட்சம் மக்களுக்குத் தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.



எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ, பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர்நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும், கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர்நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக் காது என்பது அறிவியலின் முடி வாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது. பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு ஜம்ஜம் தண்ணீரில் மற்ற தண்ணீரை விட அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. ஜம்ஜம் தண்ணீர் அருந்துவோர் இதை அனுபவத்தில் உணரலாம்.



மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோ ரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. ஒவ்வொரு மதத்தினரும் தமது மதத்துடன் தொடர்புடைய அற்புதங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் அவை வெறும் நம்பிக்கை அடிப்படியிலானவை தான். சோதித்து உறுதி செய்யப்பட்டவை அல்ல. ஆனால் தினசரி 40 லட்சம் மக் களுக்கு அந்தத் தண்ணீர் குடிநீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ ۖ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ۗ وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ



அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார் அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.

திருக்குர்ஆன்  3:97

சுப்ஹானல்லாஹ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்